சனி, டிசம்பர் 12, 2009

பாரதி..!


பாரதி - உன் பாடல் தீ
பாரிருள் அறுக்கும் பரிதி - நீ..!
நீ நடந்த வீதி - என்றும்
எங்கள் பள்ளிக்கூடம்..!

நீ சொல்லியதொரு பாதி - யாம்
உரைப்போம் உலகுக்கு மீதி..!
சொல்லுதல் யார்க்கும்எளிது - உனைப்போல் 
சொன்னது செயல் அரிது..! 

பாமரனுகாய் பாட்டு படித்தாய்,
வீரனாய் வாழ்ந்து இருந்தாய், 
இறந்தும் முடியாது தொடர்ந்தாய்..!

பார் எங்கும் உன் பா தங்கும் 
வானும் மண்ணும் உன்னை பாட கெஞ்சும் 
யாழும் குழலும் உன் கவிதை பாடும்..!

(இவைகள் அவர் பாடல்கள் படிக்கும் போது தோன்றிய சிந்தனை துளிகள், தொடர் சந்தங்கள் இல்லை)

17 கருத்துகள்:

  1. உங்கள் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    கவிதை அருமை நண்பரே.
    பார‌தி இருந்தால் ச‌ந்தோச‌ப்ப‌ட்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பெரியவரே (அக்பர்)..! just kidding..!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் அனைவரும் படித்து பயன் பெறுவர்.

    பதிலளிநீக்கு
  4. நல்லா வந்துருக்கு பாஸ்

    //நீ எழுதி யாம் படித்த
    யாவும் கீதை..! //

    இந்த வரிகள் நிதர்சனம் ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் தோன்றும் வார்த்தைகள் இவை...

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்லா கவிதை வந்திருக்குங்க. பாரதியை மறக்காமல் அவர் பிறந்த நாளை ஒட்டி வந்திருக்கும் உங்கள் கவிதை அருமைங்க.

    பதிலளிநீக்கு
  6. பாருக்கு ஒரு பாரதி
    இருந்தால் போதும்
    பாரெல்லாம் பாட்டெழுதும்.
    நாட்டுக்கு ஒரு பாரதி
    நடந்தால் போதும்
    நடப்பதெல்லாம்
    நலமே காணும்.
    வீட்டுக்கு ஒரு பாரதி
    வீற்றிருந்தால் போதும்
    வீடே சின்ன நாடாகும்
    அதுவே நம் பாரதமாகும்

    பதிலளிநீக்கு
  7. பாரதியை மறப்பவன் தமிழனாய் இருக்க முடியாது.. பாரதியை தெரியாதவன் படிதவனாகவே இருக்க முடியாது..! கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா அவர்களே..!

    பதிலளிநீக்கு
  8. goma அவர்களே.. அசத்துகிறீர்கள் பின்னூட்டமும் கவிதையுடனா.. சிறந்த சிந்தனை..! நன்றி..

    பதிலளிநீக்கு
  9. //நீ எழுதி நாம் படித்தோம்
    தமிழில் கீதை,
    நீ எழுதி யாம் படித்த
    யாவும் கீதை..! //

    மிக அருமை

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி..!அருள்மொழியன்..!

    பதிலளிநீக்கு
  11. பாரதியைப் பலவிதத்தில் பாடி விட்டீர்கள் சக்தி.
    கொஞ்சம் தட்டச்சுப் பிழைகளை மட்டும் எடிட் செய்துவிடுங்கள். இன்னும் நிறைய அழகுத் தமிழை உங்களிடம் எதிர்பார்க்க்கிறோம்.
    பாடல் வெகு அருமை. மனதிலிருந்து வந்த வார்த்தைகள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நண்பரே!
    எதுகை, மோனையுடன் உங்கள் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி..!

    SANTHOSHI

    வல்லிசிம்ஹன்

    அன்புடன் சக்தி..!

    பதிலளிநீக்கு
  14. வல்லிசிம்ஹன் அவர்களே..!

    யாம் அறிந்த வரையில் மாற்றிவிட்டோம்.. இன்னும் ஏதேனும் குற்றம் இருப்பின் குறிப்பிட்டு சொல்லவும்.. வாழ்த்துக்கள், ஊக்கம் தருகிறது, உங்களைபோல் தவறுகளை சுட்டி காட்டுவது பெரும் நல்ல மாற்றத்தை தருகிறது.. தமிழே ஒரு அழகான ஒன்று, அதிலும் அழகிய தமிழா? முயற்சி செய்கிறேன்.. கவிதை எழுத தனியாக அமர்ந்து யோசிப்பதில்லை, கேட்கும் விஷயங்களில் என் மனம் கவந்த அல்லது கோவப்படுத்தும் கருக்களை எடுத்து எழுதுவது அவ்வளவுதான்.. தோன்றுவதை எல்லாம் எழுதுவதில்லை, என் கொள்கைக்கு இயன்றதை மட்டும் எழுதுகின்றேன்.. அன்பன் சக்தி..!

    பதிலளிநீக்கு
  15. YOU CAN FIND THE POEMS OF BARATHI HERE...

    http://tamilkavingan.blogspot.com/2009/11/blog-post_05.html

    http://www.puducherry.com/bharathiar/

    http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/

    http://tamilelibrary.org/teli/barathiun.html

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!