வியாழன், டிசம்பர் 03, 2009

யார் கரங்கள்..!


சகோதரி அருணா அவர்களின் கரங்களினால் தீட்டிய கரங்கள்

அதனமிகளிடம் தனம்
தானம் வினவும் கரங்களா..!

இறைவனிடம் அவனோரம்
ஓரிடம் வேண்டும் கரங்களா..

நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்
தினக்கூலியின் கரங்களா..!

வலிநிறைந்த கரங்களா..!
வலுவிழந்த கரங்களா..!

கறைபடிந்த கரங்களா..!
கலைசொரியும் கரங்களா..!

சித்தனின் கரங்களா..!
பித்தனின் கரங்களா..!

எஞ்சிந்தை உரைப்பது யாதெனில்
நல்லனவெல்லாம் செய்தும்

உள்ளனவெல்லாம் கொடுத்ததும்
கொண்டனவெல்லாம் இழந்து

சாய்வதற்கு தோள் தேடும்
உண்டுரங்க இடம் தேடும்

அடுத்தநொடி வாழ வழிதேடும்
ஈழத்தமிழனின் கரங்களே..!

5 கருத்துகள்:

  1. நன்று நண்பரே.. கரங்களில் இத்தனையா.. சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  2. //சாய்வதற்கு தோல் தேடும்//


    தோல் அல்ல.அது தோள் என்று மாற்றுங்கள் சக்தி.
    நல்ல சமுகம் சார்த்த கவிதை.நல்ல நடை.அருமை.

    பதிலளிநீக்கு
  3. தங்களது வருகைக்கும் பதிவுக்கும் நன்றி..

    PPattian : புபட்டியன்

    பூங்குன்றன்.வே

    அன்புடன் அருணா

    நன்றியுடன் சக்தி..!

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!