சனி, ஜனவரி 30, 2010

அக்காவுக்கு அர்ப்பணம்..!


என்வாசல் தோரணமே
இறைவன் கொடுத்த சீதனமே
பேசும் கனிமொழியே
பாடும் கவிக்குயிலே
பழக செந்தமிழே
தோழியான தமக்கையே
தூரம்போன தோழியே

தம்பியானவன்
தமியனாகும் நேரமிது,
தலைபாரம் இறக்கி
நெஞ்சில் சுமக்கும்
காலமிது - உன் திருமணம்

வார்த்தை ஒப்பனையில்லை
வெறும் கற்பனையில்லை
இடையேவந்த பந்தமில்லை
புறம்பேசும் சொந்தமில்லை- என்
அன்புக்கு வானமும் எல்லையில்லை