புதன், நவம்பர் 22, 2023

மழைச் சாரலே

நீ இப்படியே இருந்துவிடக் கூடாதா?

அறைக்குள் செயற்கை குளுமையில்
எதிர்ப்பு ஆற்றல் குறையாமல்
எல்லோரும் இன்புற்றிருக்க நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

நித்தமும் சாப்பாட்டு பொட்டலமாய்
உடலை கரிக்கும் உள்ளத்தை அரிக்கும்
வெயிலில் வெந்து ஊருக்கே
உணவு கொண்டு சேர்க்கும்
சகோதரனின் உள்ளம் குளிர நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

தூரமாய் மலைப்பகுக்கு ஓடுகிறோம்
தேகம் குளிர உன்னை தேடுகிறோம் நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

எல்லா உயிர்க்கும் உயிராய் தூவும்
மழைச் சாரலே நீ எப்போதும் எம்மோடு
இப்படியே இருந்து விடக்கூடாதா?

ஒரு ஆன்மாவின் பயணம்

ஒரு ஆன்மாவின் பயணம், 

பிறவி முன் இறையோடு 
உறவாடிய ஒரு பயணம், 

மனித உருபெற கருவறை 
இருளுக்குள் சிறு பயணம், 

சிசு முதல் பிணம் வரை 
தினம் உருமாறி வினை 
சேர்க்கும் கடும் பயணம், 

மாண்டபின் மண்ணுக்குள் 
வினைக்கீடாய் நெடும் பயணம், 

மண்பிளந்து கண்விழித்து 
சேர்த்த வினைக் கெல்லாம் 
விடைகூறும் திகில் பயணம், 

படைப்பு முதல் வீடு வரை 
படிப்படியாய் நிலை மாறும் 
ஆன்மாவின் தொலை தூரப்பயணம், 

வினைக் கீடாய் பெறுவர் 
அவரவர் தம் இருப்பிடம் 
அதுவோர் நிலைமாறாப் பயணம்! 

 

1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

5. விசாரணை காலம் (50k yrs)

6. மறுமை வாழ்கை (∞ yrs)

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது.

ஞாயிறு, டிசம்பர் 14, 2014

பெரியார் என்னதான் செய்துவிட்டார்?



பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

விவசாயி விதைத்த விதை
பொறியாளராய் விளைந்தபின் வினவுகிறான்!

என் மதத்தை இழித்ததைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

சாஸ்திரங்களை பலித்ததை தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

வேத இதிகாசங்களை நகைத்ததைவிட
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

புராணம் புளுகு என்றதைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

ஆம்! பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

இன்று கேள்வி கேட்பவரை - அன்று
கோயிலுக்குள் நுழைய செய்தார்

புத்தகம் ஏந்த செய்தார்
புதுஉலகம் காண செய்தார்

புத்திகெட்ட சூத்திர மாந்தராய்
ஒத்திருந்து மடியாதே என்றார்

வருத்தம் இதுவே! ஆரியமாயையில்
அடிமையாய் கிடந்தவன் இன்று மீண்டும்..

அட, பெரியார் என்னதான் செய்துவிட்டார்?
 உனக்கும் கேள்வி கேட்கும் உரிமை தந்தார்!