எவரை அடைய வேண்டுமோ
அவரை அடையா எழுத்தை
எழுதி என்ன பயன்?
எத்தனையோ பிழைகள்
என்னோடும் என்ற பின்
எழுதி என்ன பயன்?
இன்னும் எத்தனை கேள்வி!
இறுதியில் ஒன்றே ஒன்று,
எழுதி என்ன பயன்?
அத்தனையும் எழுதிய யாவரின்
கேள்விகள், நினைவில் கொள்
புள்ளியிலிருந்தே புத்தகம்,
பிளைகளிருந்தே பாடம்.
எழுத்தின் அவசியம் இருக்கிறது
அன்றும், இன்றும், என்றும்
ஏற்பது காலத்தின் கைகளில்!
ஆம் எழுதி என்ன பயன்?
பயனைவிடு கடைமைசெய்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!
இவன் சக்தி..!