அர்த்தமில்லா இரவுகளை
அர்த்தம் சேர்த்து
புத்துயிர் படைக்க
என்னுயிரே என்னருகேவா !!
ஒரு போர்வைக்குள்
ஆதிவாசியாய் புரளுவோம் !
ஊற்று அருவி
ஏதுமின்றி நனைவோம் !
மார்பின் முடிகளில் விரல்
நுழைத்து விளையாடவா !
மறைவிடத்தில் அம்பு
துளைக்க அனுமதி தா !
எத்தனை இரவுகள்
ஏங்கிக் கிடப்பேன் !
ஏக்கம்நீக்கி தாகம்போக்க
என்னுயிரே என்னருகேவா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!
இவன் சக்தி..!