வியாழன், அக்டோபர் 06, 2011

உன்னோடு பகிர்கிறேன்..!


அன்புள்ள BLOGGER..!

உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்

உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்

காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்

காரணந்தெரயுமா உனக்கு?
எந் நகைச்சுவைக்கு
நகைக்க எதிர்வரும்மெவரும்
இமைபொழுதில் ஆயத்தப்படுவர்

உள்ளோடும் சினந்தன்னையும்
உருவான சிந்தனையையும்
உணர்வான கண்ணீரையும்
உணர்வோர் யாருமில்லை

ஒருமுறைக்கு இருமுறை
கேட்போர் யாருமில்லை
உணராதோர் காதிலுரைக்க
தன்மானம் விடுவதில்லை

என் னிறைவனோடும்
நள்ளிரவோடு மட்டுமின்றி
என் சுமையிறக்க
உன்னோடும் பகிர்கிறேன்

பதிவதனைத்தும் உலகுக்கின்றி
எனக்குநீ மீண்டுமுரைக்க
என்னிலொருவனாய் இருப்பதால்
உன்னோடு பகிர்கிறேன்

என்னுறவு, நட்பு, காதல்
எவருமெனை உணர்ந்தாரில்லை என்னை
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
நான் உன்னோடு பகிர்கிறேன்

6 கருத்துகள்:

  1. அருமையான கவிதை

    எதையோ சொல்ல வருது.........

    பதிலளிநீக்கு
  2. மிகசிறந்த வார்த்தைப் பயன்பாடு சிறந்த ஆக்கம் உளம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!