திங்கள், நவம்பர் 23, 2009

இவன் மானிடன்..!

மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்

ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்

மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

பணத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்

மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்

1 கருத்து:

  1. இந்த கவிதையினை யாரும் படிக்கவில்லையா இல்லை படித்தும் பிடிக்கவில்லையா.. பின்னிடுகை ஒன்றும் இன்னும் இல்லையே

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!