காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 29, 2014

என்னை அன்பு செய்பவளுக்கு..



அகராதி தோற்றுப்போனது
விளங்கும்படி விளக்க 
அழகு இதுவென்று - உன் 
ஒற்றை புன்னகையை 
காணாத கண்களுக்கு...
உன் தாயும் வள்ளுவனே
உன் ஐந்தடிக்குள் - என்
அறம் பொருள் இன்பத்தை
பொதிந்ததினால்

தமிழ்ச் சுவை 
குன்றி போகுதே 
அவளின் கல்லச் 
சிரிப்பின் முன்
செல்லக் குறும்புகளை 
மெல்ல ரசிக்கும் 
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம் 
மூழ்கிப் பார்கிறேன் 
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே


செவ்வாய், செப்டம்பர் 06, 2011

உணர்வுகள் ..!


மாற்றம் தேடும் மரபுகளை
மனிதம் சாகும் யுத்தங்களை


அடைய முடியா ஆசைகளை
ஆசை தோன்றும் தருணங்களை

உள்ள முடைக்கும் ஊடல்களை
உள் ளுணர்வுத் தேடல்களை

அமைதி அழிக்கும் உணர்வுகளை
உணர்வுகள் புரியா உறவுகளை


மாற்ற வேண்டும் எண்ணங்களால்
இருக்கும்? இரும்பு உள்ளங்களால்..!

புதன், ஏப்ரல் 14, 2010

அன்பே..!


கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்

கார்ல்மார்க்ஸ் உனை யடைய 
தனி யுடமைப் பேசுவான் 

மகாக்கவி எழுதிய தூரியக்கோல் 
போல் கூரியக்கண்கள் உனது

உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது

கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும் 
கார்மேகக் கூந்தல் உனது 

காணு மியற்க்கை அழகையெல்லாம் 
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது 

அருங் கருத்துப்பல பேசுகின்றாய் 
பட்டுககோட்டையான் போலே 

உன்னை முழுமையாய்க் கவிப்பாட 
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே 


(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)

வெள்ளி, டிசம்பர் 04, 2009

அற்பு..!


அற்பு
அருகினில் இருக்கயிலே
அலைகடலும் கோணியிலே
அடித் தொலைவு போகயிலே
பிடி நாடியும் ஓடவில்லே..!

உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்

ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்

விதி வசத்தால்
மது ரசத்தால்

மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!