இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்
கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்
மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்
உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்
மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!