புதன், நவம்பர் 22, 2023

ஒரு ஆன்மாவின் பயணம்

ஒரு ஆன்மாவின் பயணம், 

பிறவி முன் இறையோடு 
உறவாடிய ஒரு பயணம், 

மனித உருபெற கருவறை 
இருளுக்குள் சிறு பயணம், 

சிசு முதல் பிணம் வரை 
தினம் உருமாறி வினை 
சேர்க்கும் கடும் பயணம், 

மாண்டபின் மண்ணுக்குள் 
வினைக்கீடாய் நெடும் பயணம், 

மண்பிளந்து கண்விழித்து 
சேர்த்த வினைக் கெல்லாம் 
விடைகூறும் திகில் பயணம், 

படைப்பு முதல் வீடு வரை 
படிப்படியாய் நிலை மாறும் 
ஆன்மாவின் தொலை தூரப்பயணம், 

வினைக் கீடாய் பெறுவர் 
அவரவர் தம் இருப்பிடம் 
அதுவோர் நிலைமாறாப் பயணம்! 

 

1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

5. விசாரணை காலம் (50k yrs)

6. மறுமை வாழ்கை (∞ yrs)

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

அவசர கவிதைகள் ...!




வந்து மறைந்த
திருமறைகள்
சில நூறு 

அனைத்தும் 
போற்றுவதில்
தாயும் ஒரு கூறு.









இருள் சேர் நேரங்கள் 
தன் நிழலையும் கொல்லும் 
முற்றிலும் இருண்டாலும் 
வாழ்வில் பொருள் சேர்க்க 
உடன் நட்பு நில்லும்.. 









தீண்டாமை இல்லாமை இயலாமை 
அறுக்கும் ஒரு கருவி கல்வி

அறியாமை புரியாமை வெல்லாமை 
விலக்கும் ஒரு விளக்கு கல்வி 

வரலாறு புரளாமல், புரண்டாலும் 
வடிக்கட்டும் வடிகட்டி கல்வி 

பாதாளம் வீழ்ந்தவனை மலை 
ஏற்றும் படிக்கட்டு கல்வி 

பலதேசம் பரதேசம் போனாலும் 
பார்போற்ற வைப்பதுவும் கல்வி 

பொருளீட்ட புகழீட்ட உயிர்காக்க 
தேசவலுகூட்ட செய்வதுவும் கல்வி 

கசடர கற்பதே கல்வி - வாழ்வில் 
கசடர செய்வதே கல்வி... 

(குறிப்பு - தோழர் தமிழ் செல்வனுக்காக அவசரமாக எழுதியவைகள் )

புதன், அக்டோபர் 29, 2014

என்னை அன்பு செய்பவளுக்கு..



அகராதி தோற்றுப்போனது
விளங்கும்படி விளக்க 
அழகு இதுவென்று - உன் 
ஒற்றை புன்னகையை 
காணாத கண்களுக்கு...
உன் தாயும் வள்ளுவனே
உன் ஐந்தடிக்குள் - என்
அறம் பொருள் இன்பத்தை
பொதிந்ததினால்

தமிழ்ச் சுவை 
குன்றி போகுதே 
அவளின் கல்லச் 
சிரிப்பின் முன்
செல்லக் குறும்புகளை 
மெல்ல ரசிக்கும் 
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம் 
மூழ்கிப் பார்கிறேன் 
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே