புதன், நவம்பர் 22, 2023

மழைச் சாரலே

நீ இப்படியே இருந்துவிடக் கூடாதா?

அறைக்குள் செயற்கை குளுமையில்
எதிர்ப்பு ஆற்றல் குறையாமல்
எல்லோரும் இன்புற்றிருக்க நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

நித்தமும் சாப்பாட்டு பொட்டலமாய்
உடலை கரிக்கும் உள்ளத்தை அரிக்கும்
வெயிலில் வெந்து ஊருக்கே
உணவு கொண்டு சேர்க்கும்
சகோதரனின் உள்ளம் குளிர நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

தூரமாய் மலைப்பகுக்கு ஓடுகிறோம்
தேகம் குளிர உன்னை தேடுகிறோம் நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

எல்லா உயிர்க்கும் உயிராய் தூவும்
மழைச் சாரலே நீ எப்போதும் எம்மோடு
இப்படியே இருந்து விடக்கூடாதா?

ஒரு ஆன்மாவின் பயணம்

ஒரு ஆன்மாவின் பயணம், 

பிறவி முன் இறையோடு 
உறவாடிய ஒரு பயணம், 

மனித உருபெற கருவறை 
இருளுக்குள் சிறு பயணம், 

சிசு முதல் பிணம் வரை 
தினம் உருமாறி வினை 
சேர்க்கும் கடும் பயணம், 

மாண்டபின் மண்ணுக்குள் 
வினைக்கீடாய் நெடும் பயணம், 

மண்பிளந்து கண்விழித்து 
சேர்த்த வினைக் கெல்லாம் 
விடைகூறும் திகில் பயணம், 

படைப்பு முதல் வீடு வரை 
படிப்படியாய் நிலை மாறும் 
ஆன்மாவின் தொலை தூரப்பயணம், 

வினைக் கீடாய் பெறுவர் 
அவரவர் தம் இருப்பிடம் 
அதுவோர் நிலைமாறாப் பயணம்! 

 

1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

5. விசாரணை காலம் (50k yrs)

6. மறுமை வாழ்கை (∞ yrs)

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

அவசர கவிதைகள் ...!




வந்து மறைந்த
திருமறைகள்
சில நூறு 

அனைத்தும் 
போற்றுவதில்
தாயும் ஒரு கூறு.









இருள் சேர் நேரங்கள் 
தன் நிழலையும் கொல்லும் 
முற்றிலும் இருண்டாலும் 
வாழ்வில் பொருள் சேர்க்க 
உடன் நட்பு நில்லும்.. 









தீண்டாமை இல்லாமை இயலாமை 
அறுக்கும் ஒரு கருவி கல்வி

அறியாமை புரியாமை வெல்லாமை 
விலக்கும் ஒரு விளக்கு கல்வி 

வரலாறு புரளாமல், புரண்டாலும் 
வடிக்கட்டும் வடிகட்டி கல்வி 

பாதாளம் வீழ்ந்தவனை மலை 
ஏற்றும் படிக்கட்டு கல்வி 

பலதேசம் பரதேசம் போனாலும் 
பார்போற்ற வைப்பதுவும் கல்வி 

பொருளீட்ட புகழீட்ட உயிர்காக்க 
தேசவலுகூட்ட செய்வதுவும் கல்வி 

கசடர கற்பதே கல்வி - வாழ்வில் 
கசடர செய்வதே கல்வி... 

(குறிப்பு - தோழர் தமிழ் செல்வனுக்காக அவசரமாக எழுதியவைகள் )