செவ்வாய், செப்டம்பர் 06, 2011

உணர்வுகள் ..!


மாற்றம் தேடும் மரபுகளை
மனிதம் சாகும் யுத்தங்களை


அடைய முடியா ஆசைகளை
ஆசை தோன்றும் தருணங்களை

உள்ள முடைக்கும் ஊடல்களை
உள் ளுணர்வுத் தேடல்களை

அமைதி அழிக்கும் உணர்வுகளை
உணர்வுகள் புரியா உறவுகளை


மாற்ற வேண்டும் எண்ணங்களால்
இருக்கும்? இரும்பு உள்ளங்களால்..!

வெள்ளி, ஜூலை 23, 2010

தாய்மண்ணே!


எத்தனையோ
காலந் தொட்டு

எத்தனையோ
வாழ்க்கைக் கெட்டு

எத்தனையோ
உறவை விட்டு

எத்தனையோ
உயிரைச் சுட்டு

இன்னும் எத்தனையோ
எத்தனையால் கிட்டிய

நம் சுதந்திரத்தை
நம் அத்தனின்

பெயரால் மொத்தமாய்க்
காத்துச் சுத்தனாவோம்...!

புதன், ஏப்ரல் 14, 2010

அன்பே..!


கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்

கார்ல்மார்க்ஸ் உனை யடைய 
தனி யுடமைப் பேசுவான் 

மகாக்கவி எழுதிய தூரியக்கோல் 
போல் கூரியக்கண்கள் உனது

உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது

கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும் 
கார்மேகக் கூந்தல் உனது 

காணு மியற்க்கை அழகையெல்லாம் 
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது 

அருங் கருத்துப்பல பேசுகின்றாய் 
பட்டுககோட்டையான் போலே 

உன்னை முழுமையாய்க் கவிப்பாட 
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே 


(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)