புதன், அக்டோபர் 29, 2014

துணுக்குகள்..



இறத்தல் 
இழப்பில்லை 
இரத்தல் 
இழுக்கு..
அன்பு
உலகாழும் 
அதுவன்றி 
உலகுவீழும்..!

புன்னகையும் 
மௌனமும் 
கேடயம்...
நம் பிழை
பிறர் பொறுக்கத் 
தேடும் மனம், 
பிறர் பிழைபொறுக்க 
மறப்பது விந்தை..

"பொறுமை" இழந்தால்
விளைவுகள் சொல்லுகிறது
அதன் விலைமதிப்பை...

காசு


காசு - நீ 
அற்புத ஆசான், 
அனைவரின் அசல் 
வர்ணம் காட்டும் 
கண்ணாடி

பொய் உரைத்தல்
திறமை என்பாய்,
உண்மை உதிர்ந்தால்
உளறல் என்பாய்..

கேடென்றே விளங்கியும் 
விழ செய்வாய், 
சுற்றமும் நட்பும் 
விலக செய்வாய்,

காசு - நீ 
அழகிய சதிகாரி,
இருந்தும் உறுதி 
கொண்ட உள்ளமுன் 
தோற்று போவாய்.

புதன், ஆகஸ்ட் 06, 2014

காஸா...!


அழக்கூட நேரமின்றி 
சிதறிய உடலை 
கழுவி முடித்து 
அடுத்தநொடி அணுகுண்டை 
அன்ணாந்து பார்க்கும் 
அவனுக்காக அழ 
இஸ்லாமியானாய் அல்ல 
நாம் மனிதனாய் 
இருத்தல் போதாதா..? 

இந்தியனாய் தமிழனாய்
இருப்பது பற்று!
இஸ்லாமியானாய் 
இருப்பது வெறி! - இது 
உலக அகராதிகள் 
வரையறுத்த வரையறை! 
இதுயென்ன நீதி.?