செவ்வாய், ஜனவரி 15, 2013

என்னை யாரென்று...



எதிமறை வார்த்தைக்கெல்லாம்
வரையறா விடுமுறைதந்து
உள்ளஞ்சிலிர்க்கும் உணர்வூட்டும்
தமிழ்த்தேடும் அனுபவம்

வெற்றிதரா தருணங்கள்
சோகம்விதைக்கா ஆச்சரியம்
இலக்கிடம் இடைவெளியின்றி
நகரும் நோகாபாதம்

உழைப்பின் ருசியறிந்த
உச்சக்கட்ட நிமிடங்கள்
வேர்வையின்றி விளைந்த
வெற்றியும் கசந்தமாயம்

என்னை யாரென்று உணர்ந்தபின்
எத்தனை எத்தனை மாற்றம்
"நாளை" விழிகளில் பதிகிறது 
இமயம் தொட்ட நிமிடங்களாய்...

புதன், அக்டோபர் 26, 2011

ஆயுதம் வேண்டும் ..!



துணை யில்லா 
நேரம் வரு 
காமஞ் சில 

உண வில்லா
சீரும் பெரு
விலங்கு போல 

சீரு விலங்கை 
கொல்லுஞ் சிறு 
அம்பு போல 

வருங் காமங் 
கொல்ல வொரு 
ஆயுதம் வேண்டும் 

என் போல் 
இறை நேச 
நெஞ்ச மெல்லாம் 

ஈர மின்றி
உருமு போலதை
வீழ்த்த வேண்டும்


திங்கள், அக்டோபர் 17, 2011

அன்பு மனமே


ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 

பாதிவரை வாழ்ந்துவிட்டாய்
வாழ்ந்தவரை லாபமில்லை 
மீதிவாழத்  துனிந்துவிடாய்
வாழத்துணை தேவையில்லை 

வந்தவரும் போனவரும்  
யாருமென் நினைவிலில்லை  
வருபவரும் இருப்பவரும் 
போய்விடுவார் பொய்யுமில்லை 

சொந்தமொன்றைத் தேடித்தேடி 
உன்னையேன் வாட்டுகின்றாய்
இருப்பதெல்லாம் போதாதென்று  
இன்னுமொன்றைத் தேடுகின்றாய் 

ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய்