வியாழன், அக்டோபர் 06, 2011

உன்னோடு பகிர்கிறேன்..!


அன்புள்ள BLOGGER..!

உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்

உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்

காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்

காரணந்தெரயுமா உனக்கு?
எந் நகைச்சுவைக்கு
நகைக்க எதிர்வரும்மெவரும்
இமைபொழுதில் ஆயத்தப்படுவர்

உள்ளோடும் சினந்தன்னையும்
உருவான சிந்தனையையும்
உணர்வான கண்ணீரையும்
உணர்வோர் யாருமில்லை

ஒருமுறைக்கு இருமுறை
கேட்போர் யாருமில்லை
உணராதோர் காதிலுரைக்க
தன்மானம் விடுவதில்லை

என் னிறைவனோடும்
நள்ளிரவோடு மட்டுமின்றி
என் சுமையிறக்க
உன்னோடும் பகிர்கிறேன்

பதிவதனைத்தும் உலகுக்கின்றி
எனக்குநீ மீண்டுமுரைக்க
என்னிலொருவனாய் இருப்பதால்
உன்னோடு பகிர்கிறேன்

என்னுறவு, நட்பு என எவரும் 
எனை உணர்ந்தாரில்லை என்னை
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
நான் உன்னோடு பகிர்கிறேன்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

உணர்வுகள் ..!


மாற்றம் தேடும் மரபுகளை
மனிதம் சாகும் யுத்தங்களை


அடைய முடியா ஆசைகளை
ஆசை தோன்றும் தருணங்களை

உள்ள முடைக்கும் ஊடல்களை
உள் ளுணர்வுத் தேடல்களை

அமைதி அழிக்கும் உணர்வுகளை
உணர்வுகள் புரியா உறவுகளை


மாற்ற வேண்டும் எண்ணங்களால்
இருக்கும்? இரும்பு உள்ளங்களால்..!

வெள்ளி, ஜூலை 23, 2010

தாய்மண்ணே!


எத்தனையோ
காலந் தொட்டு

எத்தனையோ
வாழ்க்கைக் கெட்டு

எத்தனையோ
உறவை விட்டு

எத்தனையோ
உயிரைச் சுட்டு

இன்னும் எத்தனையோ
எத்தனையால் கிட்டிய

நம் சுதந்திரத்தை
நம் அத்தனின்

பெயரால் மொத்தமாய்க்
காத்துச் சுத்தனாவோம்...!