செவ்வாய், மே 28, 2024

வானவில்

மழைத் திருவிழாவின்
தோரணமே வானவில்லே!
தூரிகையின்றி இயற்கை
வரைந்த ஓவியமே!
நீ எங்கு தொடங்கி
எங்கு முடிகிறாய்?

கதிரவன் உன்
நண்பனா? எதிரியா?
அவன் கதிர்களால்
நீ எழுகிறாய்!
ஆனால் அவன்
எதிரே நிற்கிறாய்!

குளிரும் மழையும்
சுடும் கதிரும்
சேரும் பொழுது
வரும் வானவில் - நீ
சொல்லும் நியதி,
இன்பதுன்பம் இணைவதே 
அழகிய வாழ்வு!

மழை பொழிய 
காத்திருக்கும் நாங்கள்
மழை ஓயவும்
காத்து இருக்கிறோம்
உனக்காக!