சனி, ஆகஸ்ட் 10, 2013
வெள்ளி, மார்ச் 01, 2013
மங்கையர் தினம்..!
மார்ச் 8 மங்கையர் தினம்..!
ஒற்றைக் கவிதையில் எத்தனை எழுத?
உள்ளங் கொண்ட கவலை.!
எழுதத் தொடங்கிய பேனாவுக்கு
உள்ளூர தொற்றிக் கொண்ட பயம்
மை தீர்ந்துவிடுமே என்று.!
பெண்மையின் மென்மை
பேசிய பேனாக்களெல்லாம்
பெண்ணின் பெருமை
அவள் கொண்டதிறமை
இவையென பட்டியலிட்டு
பறைசாற்றும் காலமிது.!
அன்னை ஆயிஷா, தெரசா,
இந்திராகாந்தி யெல்லாம் பானைச்
சோற்றின் ஒருபதம் - பானையளவு
எவர் கணிப்பதும் உண்மையில்
அளவில் அற்பமே !
துறைக்கொரு பெண்ணிருந்த
காலம்போய் தூவிய மழையென
துறைதோறும் அசத்தும்
மங்கையர் ஆயிரமாயிரம் - இங்கே
அரிசியல்போய் அரசியலும்
செய்யும் பெண்ணினம்.!
காதலுக்கு கணிக்கையில்லை நீ
அடிப்படையை புரட்டிபோட
புயலாய் வந்த புரட்சி,
ஆணின் வெற்றிக்கு தேவை நீ
ஓயாதுழைப்பதுன் பிறவிகுணம்
உந்துதலின்றி பெறுவாய் வெற்றி
புதன், ஜனவரி 16, 2013
இறைவா..!
உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா
மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா
நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா
எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா
என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா
எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா
இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிறை யாக்குமப்பா
வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா...
செவ்வாய், ஜனவரி 15, 2013
என்னை யாரென்று...
எதிமறை வார்த்தைக்கெல்லாம்
வரையறா விடுமுறைதந்து
உள்ளஞ்சிலிர்க்கும் உணர்வூட்டும்
தமிழ்த்தேடும் அனுபவம்
வெற்றிதரா தருணங்கள்
சோகம்விதைக்கா ஆச்சரியம்
இலக்கிடம் இடைவெளியின்றி
நகரும் நோகாபாதம்
உழைப்பின் ருசியறிந்த
உச்சக்கட்ட நிமிடங்கள்
வேர்வையின்றி விளைந்த
வெற்றியும் கசந்தமாயம்
என்னை யாரென்று உணர்ந்தபின்
எத்தனை எத்தனை மாற்றம்
"நாளை" விழிகளில் பதிகிறது
இமயம் தொட்ட நிமிடங்களாய்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)