புதன், அக்டோபர் 26, 2011
திங்கள், அக்டோபர் 17, 2011
அன்பு மனமே
ஆசையோடு பேசுகின்றாய்
ஆறுதலை தேடுகின்றாய்
ஆறுமனமே ஆறுஎன்று
உனக்குநீயே பாடுகின்றாய்
பாதிவரை வாழ்ந்துவிட்டாய்
வாழ்ந்தவரை லாபமில்லை
மீதிவாழத் துனிந்துவிடாய்
வாழத்துணை தேவையில்லை
வந்தவரும் போனவரும்
யாருமென் நினைவிலில்லை
வருபவரும் இருப்பவரும்
போய்விடுவார் பொய்யுமில்லை
சொந்தமொன்றைத் தேடித்தேடி
உன்னையேன் வாட்டுகின்றாய்
இருப்பதெல்லாம் போதாதென்று
இன்னுமொன்றைத் தேடுகின்றாய்
ஆசையோடு பேசுகின்றாய்
ஆறுதலை தேடுகின்றாய்
ஆறுமனமே ஆறுஎன்று
உனக்குநீயே பாடுகின்றாய்
வியாழன், அக்டோபர் 06, 2011
உன்னோடு பகிர்கிறேன்..!
அன்புள்ள BLOGGER..!
உன்னிடம் பகிர்வதில்
உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்
உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்
காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்
காரணந்தெரயுமா உனக்கு?
எந் நகைச்சுவைக்கு
நகைக்க எதிர்வரும்மெவரும்
இமைபொழுதில் ஆயத்தப்படுவர்
உள்ளோடும் சினந்தன்னையும்
உருவான சிந்தனையையும்
உணர்வான கண்ணீரையும்
உணர்வோர் யாருமில்லை
ஒருமுறைக்கு இருமுறை
கேட்போர் யாருமில்லை
உணராதோர் காதிலுரைக்க
தன்மானம் விடுவதில்லை
என் னிறைவனோடும்
நள்ளிரவோடு மட்டுமின்றி
என் சுமையிறக்க
உன்னோடும் பகிர்கிறேன்
பதிவதனைத்தும் உலகுக்கின்றி
எனக்குநீ மீண்டுமுரைக்க
என்னிலொருவனாய் இருப்பதால்
உன்னோடு பகிர்கிறேன்
என்னுறவு, நட்பு என எவரும்
எனை உணர்ந்தாரில்லை என்னை
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
நான் உன்னோடு பகிர்கிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)